இந்தியா

வீட்டு வாசலில் கிடந்த பெண் சடலம்.. புடவை பீரோவில் சிக்கி இறந்ததாக நாடகமாடிய கணவர்.. இறுதியில் ட்விஸ்ட் !

மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, புடவை பீரோவில் மாட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டு வாசலில் கிடந்த பெண் சடலம்.. புடவை பீரோவில் சிக்கி இறந்ததாக நாடகமாடிய கணவர்.. இறுதியில் ட்விஸ்ட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

புதுச்சேரி மங்களம் தொகுதிக்குட்பட்ட அனந்தபுரம் பாரதி வீதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் - கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு ராஜசேகர் (25) என்ற மகன் உள்ளார். இந்த சூழலில் கலையரசி, அவர்கள் வசித்துவரும் வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து, வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கலையரசியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதனை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

வீட்டு வாசலில் கிடந்த பெண் சடலம்.. புடவை பீரோவில் சிக்கி இறந்ததாக நாடகமாடிய கணவர்.. இறுதியில் ட்விஸ்ட் !

இதனிடையே கலையரசியின் கணவரை போலீசார் அழைத்து விசாரணை செய்தபோது வீட்டு வாசலில் இருந்த பீரோவின் கைப்பிடியில் கலையரசியின் புடவை மாட்டிக்கொண்டு கழுத்து நெரித்து இறந்ததாகவும், தான் செய்வது அறியாமல் தனது மனைவியின் உடலை வீட்டு வாசலில் போட்டுவிட்டு பின்புறம் சென்று உறங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ராஜேந்திரன் மீது போலீசார் சந்தேகத்தில் இருந்தனர். இந்த சமயத்தில் கலையரசியின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியானது. அதில் கலையரசி துன்புறுத்தப்பட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் ராஜேசந்திரனை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

வீட்டு வாசலில் கிடந்த பெண் சடலம்.. புடவை பீரோவில் சிக்கி இறந்ததாக நாடகமாடிய கணவர்.. இறுதியில் ட்விஸ்ட் !

போலீசார் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் ராஜேந்திரன் தான் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவர், தனக்கு மது அருந்த பணம் தராத காரணத்தால் தனது மனைவியிடம் சண்டையிட்டு புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புகொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

மது அருந்த பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, புடவை பீரோவில் மாட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரின் செயல் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories