இந்தியா

குழந்தையை கடத்தி வன்கொடுமை.. கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றிய பொதுமக்கள்.. கேரளாவில் அதிர்ச்சி !

வடமாநில தொழிலாளரின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ய முயன்றவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குழந்தையை கடத்தி வன்கொடுமை.. கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றிய பொதுமக்கள்.. கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம், ஆலுவா பகுதியில் வடமாநிலத் தொழிலாளி தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் சம்பவத்தன்று இரவு வடமாநிலத் தொழிலாளியின் பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் குழந்தையை தேடி வந்துள்ளனர்.

இதனிடையே காலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தையின் சத்தம் கேட்டு வெளியே வந்தபோது ஒருவர் குழந்தையை நிர்வாணமாக தூக்கிச்சென்றதைக் கண்டு அவரை துரத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் குழந்தையை அங்கு வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

பின்னர் காயத்தோடு இருந்த அந்த குழந்தையை மீட்டவர்கள், போலிஸாருக்கு தகவல் அளித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின்னர் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அந்த குழந்தை வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையை கடத்தி வன்கொடுமை.. கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றிய பொதுமக்கள்.. கேரளாவில் அதிர்ச்சி !

தொடர்ந்து சிசிடிவி உதவியோடு போலிஸார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தின் ஈடுபட கிறிஸ்டின் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2017-ம் ஆண்டு கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.

மேலும், இரவு நேரத்தில் திருடுவதை வழக்கமாக கொண்டவர், வடமாநில தொழிலாளரின் வீட்டுக்கு சென்றுதிருடியபோது இந்த குழந்தையை கண்டு அவரை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ய முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories