இந்தியா

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்.. வீட்டு பணியாளர் கைது : நடந்தது என்ன?

விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை, அவரது வீட்டு பணியாளர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்.. வீட்டு பணியாளர் கைது : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (Rupal Ogrey). 22 வயது இளம்பெண்ணான இவர் மும்பையின் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்தார். பயிற்சி விமான பணிப்பெண்ணாக இருக்கும் இவர், மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்த சூழலில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரியும், சகோதரியின் காதலரும் ஊருக்கு சென்றதால், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் தினமும் அவரது குடும்பத்துடன் மொபைலில் பேசி வந்துள்ளார். ஆனால் நேற்றைய முன்தினம் ரூபாலுக்கு அவரது குடும்பத்தார் போனில் அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது அவர் அதனை எடுக்கவில்லை.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்.. வீட்டு பணியாளர் கைது : நடந்தது என்ன?

தொடர்ந்து பலமுறை அழைத்தும் அவர் பதிலளிக்கவில்லை என்பதால், அங்கிருக்கும் இவரது தோழிக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளனர். அதன்படி அங்கே சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்தனர். அப்போது அங்கே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளம்பெண் ரூபால் ஓக்ரே சடலமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருக்கும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்கையில், அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் விக்ரம் அத்வால் (40) என்ற நபர் தான் இறுதியாக இவரை சந்திக்க வந்தது தெரியவந்தது.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த விமான பெண் ஊழியர்.. வீட்டு பணியாளர் கைது : நடந்தது என்ன?

இதையடுத்து அவரை பிடித்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபால் ஓக்ரேவுக்கும் விக்ரம் அத்வாலுக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளதும், அதன் எதிரொலியாக சம்பவத்தன்று அவரை கொன்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories