இந்தியா

வயிற்று வலி.. மனைவி தற்கொலை: ஓடும் ரயில் முன் பாய்ந்த கணவன்: ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோகம்!

ஆந்திராவில் உடல் நலக்குறைவால் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலி.. மனைவி தற்கொலை: ஓடும் ரயில் முன் பாய்ந்த கணவன்: ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கநாயக்கலு. இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மேலும் இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் லதா அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இருந்தும் அவருக்கு வயிற்று வலி பிரச்சனை சரியாகவில்லை.

வயிற்று வலி.. மனைவி தற்கொலை: ஓடும் ரயில் முன் பாய்ந்த கணவன்: ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோகம்!

இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்காமல் வீட்டிலிருந்த பூச்சிச்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். பிறகு மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி இறந்ததைக் கேட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த கணவன் ரங்கநாயக்கலு அருகே உள்ள துப்பட்டு ரயில் தண்டவாளம் சென்று ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

வயிற்று வலி.. மனைவி தற்கொலை: ஓடும் ரயில் முன் பாய்ந்த கணவன்: ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த சோகம்!

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மனைவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories