இந்தியா

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நண்பர், அவரது பெண் தோழியை கொன்று காட்டுக்குள் வீசிய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள பாலக்கடவு என்ற இடத்தை சேர்ந்தவர் சனல். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிரா என்ற பெண்ணுடன் திருமணமானது. சனலின் மாணவி ஆதிராவும், அவரது நண்பர் அகில் என்பவரும் அங்கமாலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனால் அகிலும் ஆதிராவும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்த சூழலில் அகிலுளுக்கு திடீரென பணத்தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அவரது நண்பரின் மனைவியான ஆதிராவிடம் பணம் கேட்டுள்ளார். எனவே அவரும் தன்னிடம் இருந்த பணம், நகைகளை அவ்வப்போது கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!

இந்த சூழலில்தான், தான் கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டுள்ளார் ஆதிரா. அதற்கு அகிலோ இப்போ தருகிறேன் அப்போ தருகிறேன் என்று கூறி இழுத்தடித்துள்ளார். இதனால் பொறுமை இழந்த ஆதிரா, அகிலிடம் பணத்தை விரைந்து தருமாறு சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டுள்ளது.

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!

எனவே அகில், தனது தோழியான ஆதிராவை கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ஆதிராவுக்கு பணம் தருவதாக கூறி அழைத்துள்ளார். பின்னர் அவரை காரில் அதிரப்பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கேயும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அகில், ஆதிராவின் துப்பட்டாவாலே அவரது கழுத்தை நெரித்து கொன்று, உடல் பாகங்களை வெட்டி காட்டு பகுதியில் வீசியுள்ளார்.

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!

இந்த நிலையில் ஆதிராவின் கணவர் சனல், தனது மனைவியை தேடியுள்ளார். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை என்பதால் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறுதியாக ஆதிரா, அகிலிடம் பேசியது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில் தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடியுள்ளார்.

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. தோழியை கொன்று உடலை காட்டுக்குள் வீசிய நண்பன்.. கேரளாவில் பகீர்!

பின்னர் போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கையில், அகில் தான் ஆதிராவை அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அகிலிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் தான் ஆதிராவை கொலை செய்து காட்டுக்குள் வீசியதாக ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், அந்த காட்டுப்பகுதியில் இருந்த கால் ,உடல் பாகங்களை மீட்டனர்.

தொடர்ந்து அதனை உடற்கூறாய்வுக்கு திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காணாமல் போன மற்ற உடல் பாகங்களை தேடி வருகின்றனர். தற்போது அகிலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நண்பர், அவரது பெண் தோழியை கொன்று காட்டுக்குள் வீசிய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories