இந்தியா

"என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது.. அதை தடுத்து நிறுத்துங்கள்" -மேரி கோம் உருக்கமான வேண்டுகோள் !

மாநிலத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசையும், மத்திய அரசையும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன் என 5 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது.. அதை தடுத்து நிறுத்துங்கள்" -மேரி கோம் உருக்கமான வேண்டுகோள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து. இந்த நிலையில், சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

"என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது.. அதை தடுத்து நிறுத்துங்கள்" -மேரி கோம் உருக்கமான வேண்டுகோள் !

இந்த பேரணியில் வன்முறை பரவ வாய்ப்புள்ளது என்பதால் மாநிலம் முழுக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

மோரே நகரில் மைத்தேயி குழுவினரை இலக்கு வைத்து குக்கி இனத்தவர் தாக்கிய நிலையில், அந்த பகுதியில் வசித்துவந்த தமிழ் சமூக மக்களின் சொத்துக்களும் தீக்கிரையாகின.தமிழர்களின் சில வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில், தமிழர்களுக்கு சொந்தமான சில உணவகங்களும் எரிக்கப்பட்டுள்ளன.

"என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது.. அதை தடுத்து நிறுத்துங்கள்" -மேரி கோம் உருக்கமான வேண்டுகோள் !

இந்த வன்முறை காரணமாக மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணையச் சேவையை முடக்க மாநில அரசு உத்தரவிட்டது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 114 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசையும், மத்திய அரசையும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன் என 5 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற மேரி கோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது.. அதை தடுத்து நிறுத்துங்கள்" -மேரி கோம் உருக்கமான வேண்டுகோள் !

இது தொடர்பாக பேசியுள்ள அவர், “என் மாநிலம் (மணிப்பூர்) பற்றி எரிகிறது. மாநிலத்தில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசையும், மத்திய அரசையும் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவே எனது வேண்டுகோள். ஏன் நாம் அனைவரும் அமைதியாக வாழ முடியாது? இந்த வன்முறையில் துரதிருஷ்டவசமாக சிலர் உயிரிழந்தனர். கூடிய விரைவில் இவை எல்லாம் முடிவுக்குவர வேண்டும். மணிப்பூரில் நிலவும் நிலை என்னை கவலையடைச் செய்கிறது... இதற்கு முன் இவ்வளவு வன்முறையை நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories