தமிழ்நாடு

வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. சாலையில் தூக்கியெறியப்பட்ட இளம்பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம் !

சேலம் அருகே தனியார் பேருந்தில் பயணித்த இளம்பெண்,சாலை வளைவில் வேகமாக பேருந்து திரும்பும்போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. சாலையில் தூக்கியெறியப்பட்ட இளம்பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா(20) என்ற இளம்பெண், சேலம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ்சில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக தனியார் பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்தின் முன்புறம் படிக்கட்டு அருகே நின்று வந்துள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி சந்திரா தியேட்டர் என்ற பகுதியில் உள்ள சாலை வளைவு பகுதியில் பேருந்து வேகமாக திரும்பியது.

வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. சாலையில் தூக்கியெறியப்பட்ட இளம்பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம் !

அப்போது கௌசல்யா நிலை தடுமாறி பேருந்தில் இருந்து வெளியே விழுந்தார். சாலையோரம் ஜல்லிக்கற்கள் அதிகம் இருந்த நிலையில், கற்கள் மீது விழுந்த நிலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கௌசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கவுசல்யாவின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. சாலையில் தூக்கியெறியப்பட்ட இளம்பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம் !

கௌசல்யா தனியார் பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் பேருந்தில் இருந்து இளம்பெண் கௌசல்யா கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories