இந்தியா

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!

பியூட்டி பார்லர் செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிகழ்வு மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் பல்ராம் யாதவ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரீனா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. திருமணம் முடிந்து இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் சில மாதங்களிலே இருவருக்கும் வழக்கமான கணவன் - மனைவிக்குள் நடக்கும் சண்டை நடந்துள்ளது.

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!

தற்போது 34 வயதாகும் ரீனா, சம்பவத்தன்று பியூட்டி பார்லர் செல்ல தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கணவர் பல்ராம் யாதவோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கணவன் - மனைவிக்குள் சிறு சிறு தகராறு இருந்து வந்துள்ளது.

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!

இதனால் இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இந்த சூழலில் ரீனா பியூட்டி பார்லருக்கு செல்ல அனுமதி கேட்டபோது அதற்கு கணவர் மறுத்ததால் அதற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் கணவர் வீட்டை விட்டு சில மணி நேரம் வெளியேறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்ததும் மனைவி ரீனா, தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!

இதனை கண்டதும் பதறிப்போன பல்ராம், உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து மனைவியை கீழே இறக்கி பரிசோதித்தனர். அப்போது மனைவி ரீனா உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ரீனாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ரீனா உண்மையில் தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பியூட்டி பார்லர் செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“Beauty Palour-லாம் போகக் கூடாது..” -ஸ்ட்ரிக்டாக சொன்ன கணவர்.. விபரீத முடிவு எடுத்த மனைவி: மபியில் சோகம்!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !

banner

Related Stories

Related Stories