இந்தியா

குஜராத் : “நீதான் என் காதலுக்கு இடையூறாக இருக்க..” - பிஞ்சு குழந்தையை கொடுமை செய்து கொன்ற கொடூர தாய்..!

காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தாயே தனது 2 வயது குழந்தையை கொடுமை செய்து கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் : “நீதான் என் காதலுக்கு இடையூறாக இருக்க..” - பிஞ்சு குழந்தையை கொடுமை செய்து கொன்ற கொடூர தாய்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் பகுதியை சேர்ந்தவர் சலிம்பாய் வாகேர். இவரும் அந்த பகுதியை சேர்ந்த ஹூசேனா என்ற இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்து இருவருக்கும் 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்து வந்த இவர்களுக்குள் நாளடைவில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் இவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகறாரின் எதிரொலியாக ஹூசேனா, தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் பிள்ளைகளோடு வாழ்ந்து வந்துள்ளார். அங்கே சில மாதங்களாக இருந்து வந்த நிலையில், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜாகிர் பக்கீர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் : “நீதான் என் காதலுக்கு இடையூறாக இருக்க..” - பிஞ்சு குழந்தையை கொடுமை செய்து கொன்ற கொடூர தாய்..!

நாளுக்கு நாள் இவர்களது பழக்கம் காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனால் அவருடன் வசித்து வந்த இரண்டு குழந்தைகளையும் ஹூசேனா கொடுமை படுத்தி வந்துள்ளர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே, அவர் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹூசேனா, தனது ஒரு பிள்ளையை விட்டு, 2 வயதுடைய பிள்ளையுடன் தனது காதலன் ஜாகிருடன் வீடு எடுத்து வாழ தொடங்கியுள்ளார்.

இவர் குழந்தையுடன் வெளியே போய் சில நாட்களிலேயே, அந்த 2 வயது குழந்தை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தந்தை சலிம்பாய் வாகேருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

குஜராத் : “நீதான் என் காதலுக்கு இடையூறாக இருக்க..” - பிஞ்சு குழந்தையை கொடுமை செய்து கொன்ற கொடூர தாய்..!

இதனைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த சலிம்பாய் மனைவி வீட்டுக்கு விரைந்து குழந்தையை பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் உடலில் சூடு காயங்களும், தழும்புகளும் இருந்துள்ளது. இதையடுத்து தனது மனைவியும், அவரது காதலன் ஜாகீரும் தனது குழந்தையை அடித்து துன்புறுத்தி கொலை செய்ததாக கணவர் சலீம்பாய் காவல்துறையில் புகார் அளித்தார்.

குஜராத் : “நீதான் என் காதலுக்கு இடையூறாக இருக்க..” - பிஞ்சு குழந்தையை கொடுமை செய்து கொன்ற கொடூர தாய்..!

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பினர். அப்போது குழந்தை கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஹூசேனா மற்றும் காதலன் ஜாகீர் மீது கொலை வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தாயே தனது 2 வயது குழந்தையை கொடுமை செய்து கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories