இந்தியா

“என்கிட்ட ஏன் பொய் சொன்ன..?” - கோபப்பட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கொடூர கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

ஏற்கனவே திருமணமானதை மறைத்ததால் கோபமடைந்த மனைவி, தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் மீது கணவர் ஆசிட் வீசி கொலை செய்துள்ள சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்கிட்ட ஏன் பொய் சொன்ன..?” - கோபப்பட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கொடூர கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒடிசா மாநிலம் பாலாசோர் என்ற பகுதியை சேர்ந்தவர் சந்தன் ராணா. 32 வயதுடைய இவருக்கும், பனிதா சிங் என்ற 20 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. திருமணம் ஆன சில நாட்கள் கணவன் - மனைவி மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், கணவர் ராணாவுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது பனிதாவுக்கு தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்துகொண்டதால் பனிதா மிகவும் கோபம் கொண்டிருக்கிறார்.

“என்கிட்ட ஏன் பொய் சொன்ன..?” - கோபப்பட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கொடூர கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

இதனால் அவர், தனது கணவரிடம் சண்டையிட்டுள்ளார். இப்படி சண்டை பெரிதாக பனிதா, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற அவரை ராணா சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இருப்பினும் தனக்கு துரோகம் செய்ததாக கூறி, கணவருடன் செல்ல மறுத்துவிட்டார் பனிதா. இருப்பினும் மீண்டும் மீண்டும் ராணா, பனிதாவிடம் வீட்டிற்கு வருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் முரண்டுபிடித்த பனிதா, வீட்டிற்கு வரவேயில்லை. இதனால் மிகவும் ஆத்திரமடைந்த ராணா, சம்பவத்தன்றும் தனது மனைவி வீட்டிற்கு சென்று அழைத்துள்ளளார். அப்போதும் அவர் வர மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ராணா, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, தனது மனைவி பனிதா மீது வீசியுளளார்.

“என்கிட்ட ஏன் பொய் சொன்ன..?” - கோபப்பட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கொடூர கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

இதில் உடல் முழுக்க வெந்துபோன பனிதா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விழுந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தார் பனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 8 நாட்களாக சிகிச்சையில் இருந்து வந்த அவர், தற்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

“என்கிட்ட ஏன் பொய் சொன்ன..?” - கோபப்பட்ட மனைவி மீது ஆசிட் வீசிய கொடூர கணவர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ராணாவை தேடி வருகின்றனர். அவரை பிடிக்க முடியவில்லை என்பதால் அவரது முதல் மனைவியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories