இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலை.. நெருங்கிய உறவினரால் நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

கேரளாவில் பாலியல் வன்கொடுமை காரணமாக சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலை.. நெருங்கிய உறவினரால் நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம், மலப்புரம் அருகே மேலாற்றூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் இரு நாட்களுக்கு முன்னர் தனது பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இது குறித்த தகவல் போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலை.. நெருங்கிய உறவினரால் நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் சிறுமிக்கு நன்கு தெரிந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சிறுமியின் உறவினரான முகம்மது ரபீக் (வயது 21) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை அந்த இளைஞர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், தொடர்ந்து இதுபோன்ற பலமுறை அந்த சிறுமியிடம் அத்துமீறியதும் தெரியவந்தது. இதன் காரணமாக சிறுமி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தற்கொலை.. நெருங்கிய உறவினரால் நடந்த சோகம்.. கேரளாவில் அதிர்ச்சி !

இதனைத் தொடர்ந்து முகம்மது ரபீக்கை கைது செய்த போலிஸார் அவரை சிறையில் அடைந்தனர். கர்நாடகாவில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை கல்லூரி முதல்வரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நிலையில், தற்போது கேரளாவில் பாலியல் வன்கொடுமை காரணமாக சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories