இந்தியா

தொடரும் சோகம்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த ஹோட்டல் உரிமையாளர் மரணம்!

மத்திய பிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சோகம்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த ஹோட்டல் உரிமையாளர் மரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு ஜிம்மில் ஹோட்டல் உரிமையாளர் பிரதீப் ரகுவன்ஷி என்பவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிம் பயிற்சியாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உடற்பயிற்சி செய்துவிட்டு தனது ஜாக்கெட்டை பிரதீப் ரகுவன்ஷி கழற்றும்போது திடீரென மயங்கி கீழே விழும் காட்சிப் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த பிரதீப் ரகுவன்ஷி பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.

தொடரும் சோகம்.. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த ஹோட்டல் உரிமையாளர் மரணம்!

தொடர்ச்சியாக ஜிம்மில் பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஜிம்மில்தான் உயிரிழந்தார். அதேபோல் 2022ம் ஆண்டு நடிகர் சித்தாந்த் வீர் சுர்ரியவன்ஷி, ராஜூ ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் உடற்பயிற்சி செய்யும் போதுதான் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories