உத்தரபிரதேசம் காஜியாபாத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த எல்.இ.டி. டிவி வெடித்து சிதறியது. இதில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.
வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வந்து பார்த்தபோது படுகாயங்களுடன் குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 16 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுவனின் தாய், மைத்துனர், நண்பர் ஆகிய பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக பேசிய அதே குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ''வெடி விபத்து நடந்தபோது தான் வேறொரு அறையில் இருந்தேன். வெடி சத்தத்தால் வீடு குலுங்கியது. சுவர் இடிந்து விழுந்தது'' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.