இந்தியா

உ.பி-யில் பெண்ணை தாக்கிய விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி அதிரடி !

பெண்ணை தாக்கிய விவகாரத்தில் உத்தர பிரதேச பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு நேற்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

உ.பி-யில் பெண்ணை தாக்கிய விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில் வசித்து வருபவர் பா.ஜ.க நிர்வாகி ஸ்ரீகாந்த் தியாகி. கடந்த வாரம் இவர், தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு செடிகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது விதிமீறலாக இருப்பதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

உ.பி-யில் பெண்ணை தாக்கிய விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி அதிரடி !

இந்த வாக்குவாதம் இருவருக்குமிடையே மோதலாக வெடித்த நிலையில், அந்த பெண்ணை ஸ்ரீகாந்த் ஆபாசக பேசியுள்ளார். மேலும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

உ.பி-யில் பெண்ணை தாக்கிய விவகாரம்: பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதி அதிரடி !

இது தொடர்பான வீடியோவும் அண்மையில் வெளியாகி வைரலாகி வந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம், ஸ்ரீகாந்த் தியாகியைக் கைது செய்யக்கோரி கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஸ்ரீகாந்த் ஆதரவாளர்கள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே ஸ்ரீகாந்த் தியாகி தலைமறைவானார்.

பெண்ணை ஆபாசமாக பேசிய மறுநாளே, ஸ்ரீகாந்த் தியாகியின் ஆக்கிரமிப்பு இடங்கள் காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இடித்தது. இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலானது. மேலும் தலைமறைவான் ஸ்ரீகாந்த் தியாகி தேடும் பணியில் ஈடுபட்டு வந்த அதிகாரிகள் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மீரட் நகரில் தலைமறிவாகியிருந்த ஸ்ரீகாந்த் தியாகி மற்றும் அவருடன் இருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர் உத்தரபிரதேச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்து நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories