இந்தியா

14 முறை கருக்கலைப்பு.. காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. - போலிஸில் சிக்கிய கடிதம்!

தனது காதலன் 14 முறை தன்னை கருக்கலைப்பு செய்ய வைத்ததாக 33 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

14 முறை கருக்கலைப்பு.. காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. - போலிஸில் சிக்கிய கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் உள்ள 33 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது வேலைக்காக வீட்டை விட்டு டெல்லியில் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆகி, 7 - 8 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து வாழும் இவர், டெல்லியில் உள்ள நொய்டாவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அங்கே இவருக்கு ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே இவர்கள் இருவரும் ஒன்றாக லிவ்-இன்-ல் வாழ்ந்து வந்துள்ளனர்.

14 முறை கருக்கலைப்பு.. காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. - போலிஸில் சிக்கிய கடிதம்!

இந்த நிலையில், அந்த இளம்பெண் நேற்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த பெண்ணின் கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை மீட்டனர்.

14 முறை கருக்கலைப்பு.. காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. - போலிஸில் சிக்கிய கடிதம்!

அந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் தனது காதலன் தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடன் இருக்கும் ஆண் நண்பர் தன்னை கட்டாயப்படுத்தி, 14 முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்து, தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து வருவதாகவும், வேறு வழியின்றி தற்கொலை செய்வதாகவும் அதில் எழுதப்பட்டிருந்தது.

14 முறை கருக்கலைப்பு.. காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. - போலிஸில் சிக்கிய கடிதம்!

இதையடுத்து இறந்து போன பெண்ணின், தற்கொலை கடித்தத்தோடு மொபைல் போன் உள்ளிட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது குறித்து பெண்ணின் முன்னாள் கணவரையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே பீகாரில் உள்ள பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவரது உடலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

14 முறை கருக்கலைப்பு.. காதலனால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. - போலிஸில் சிக்கிய கடிதம்!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories