இந்தியா

வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. LIVE வீடியோவில் அம்பல படுத்திய பெண்

பா.ஜ.க நிர்வாகி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. LIVE வீடியோவில் அம்பல படுத்திய பெண்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், நிர்மலா யாதவ் (வயது 32) என்ற பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சோலாப்பூர் பா.ஜ.க மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தது கண்டனங்கள் எழுந்தது.

வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. LIVE வீடியோவில் அம்பல படுத்திய பெண்

இதையடுத்து, ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, நிர்மலா யாதவுக்கும், தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாகவும் காவல்துறையில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் நிர்மலா யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து, FIR பதிந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க துணைத் தலைவர் சித்ரா வாக் கூறுகையில், "ஸ்ரீகாந்த் தேஷ்முக் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், அவரை நாங்கள் பதவி விலக அறிவுறுத்தினோம்.

அதன்படி அவரும் ராஜினாமா செய்ததையடுத்து, கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் நேரில் வந்து புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. LIVE வீடியோவில் அம்பல படுத்திய பெண்

கடந்த ஆண்டு தமிழ்நாடு முன்னாள் பாஜக நிர்வாகியான கே.டி.ராகவன் இது போன்ற பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிரா பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories