இந்தியா

இந்திய கொடியை கூட சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டுமா ? - மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் சீன முதலாளிகளுக்கு இந்தியக் கொடிகளைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்கான கதவை பிரதமர் மோடி திறந்துவிட்டுள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இந்திய கொடியை கூட சீனாவிலிருந்துதான்  இறக்குமதி செய்ய வேண்டுமா ? - மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நெருங்கி வரும் தருணத்தில் அதை கொண்டாடும் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இயந்திரத்தின் மூலம் செய்யப்பட்ட பாலியஸ்டர் துணியிலான தேசிய கொடிக்கும் ஒன்றிய அனுமதி வழங்கி இருக்கிறது

காதியால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் சுதேச பொருட்களை அரசு ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கத்தை மாற்றி பாலியஸ்டர் துணியிலான தேசிய கொடிக்கும் அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்திய கொடியை கூட சீனாவிலிருந்துதான்  இறக்குமதி செய்ய வேண்டுமா ? - மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

இது தவிர பாலியஸ்டர் அல்லது இயந்திரம் மூலம் செய்யப்படும் தேசிய கொடிகளுக்கும் ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பாலியஸ்டர் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால் இது சீனாவுக்குதான் சாதகமாக இருக்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த முடிவு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார், . "நாட்டின் கருவூலம் குறைந்துகொண்டே வருவதால், இப்போது தேசியக் கொடியை விற்கும் நோக்கத்தில் அவர்கள் உள்ளனர்.

இந்திய கொடியை கூட சீனாவிலிருந்துதான்  இறக்குமதி செய்ய வேண்டுமா ? - மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

லடாக்கில் 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனப் படைகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இத்தகைய சூழலில், தற்போது சீனாவிலிருந்து இந்தியக் கொடிகளைப் பெருமளவில் இறக்குமதி செய்வதற்கான கதவை பிரதமர் மோடி திறந்துவிட்டுள்ளார்.

சீன தொழிலதிபர்களுக்குப் பலன் அளிக்கும் வகையிலேயே இத்தகைய சட்ட திருத்தத்தை மோடி செய்தார். இதன்மூலம் காதி-யின் சாரத்தையும், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தையும் மோடி தகர்த்துள்ளார்" என விமர்சித்துள்ளார். இவரின் இந்த கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories