இந்தியா

“ஒரே நாளில் நாயகனான யாசகர்..” : தூற்றிய கிராமத்தினர் தலையில் தூக்கி கொண்டாட காரணம் என்ன?

ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளதால் அவரது ஊரார் அவரை கொண்டாடி வருகின்றனர்.

“ஒரே நாளில் நாயகனான யாசகர்..” : தூற்றிய கிராமத்தினர் தலையில் தூக்கி கொண்டாட காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆந்திர மாநிலத்தில் உள்ள நீதி கிராமத்தைச் சேர்ந்த கேதாரேஸ்வர் ராவ் (55) என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் அந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக தேர்வானவர்கள் யாருக்கும் அரசு பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கவில்லை.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் கேதாரேஸ்வர் ராவ் ஏழ்மை காரணமாக சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கியுள்ளார். சில நாட்களில் இவரின் பெற்றோரும் இறந்து விட்டனர். இவரிடம் இவர் வாழ்ந்த பழைய வீட்டை தவிர வீறு ஏதும் இல்லை.

“ஒரே நாளில் நாயகனான யாசகர்..” : தூற்றிய கிராமத்தினர் தலையில் தூக்கி கொண்டாட காரணம் என்ன?

இந்த மோசமான நிலையிலும் ஒரு நாள் ஆசிரியராவேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து வந்துள்ளார். சில நேரம் இவர் விற்கும் துணியை யாரும் வாங்காத நேரம் யாசகம் பெற்று உயிர் வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில், 1998ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, கேதாரேஸ்வர் ராவ்விற்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது.

“ஒரே நாளில் நாயகனான யாசகர்..” : தூற்றிய கிராமத்தினர் தலையில் தூக்கி கொண்டாட காரணம் என்ன?

பணம் வந்தால் கண்டுகொள்ளாத உறவுகள் கூட கண்டுகொள்வதைப்போல இவர் கஷ்டப்பட்ட காலத்தில் இவரை கண்டுகொள்ளாத கிராம மக்கள் இப்போது இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இவரின் பெயரும் தற்போது சற்று வாட்டார பகுதிகளில் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories