இந்தியா

சேர் மீது ஏறி ஜன்னல் திரையை சரி செய்ய முயன்ற மாணவி.. 5வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நடந்த சோகம்!

அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியின் பால்கனியில் திரையை சேர் மீது ஏறி சரி செய்தபோது தவறிக் கீழே மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேர் மீது ஏறி ஜன்னல் திரையை சரி செய்ய முயன்ற மாணவி.. 5வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் மங்களூர் நகர், கத்ரி அருகே உள்ள கங்கநாடி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐந்தாவது மாடியில் வசித்து வந்தவர் முகமது இம்தியாஸ் (48). இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில் முதல் மகளான சேஷையர் இன்தியாஜ் (15) பிஜய் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை தனது வீட்டில் பால்கனியில் சேர் மீது ஏறி பால்கனியில் திரைச்சீலைகளை சரிசெய்துக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரின் வீட்டின் வெளிப்புறம் கீழே தவறி விழுந்துவிட்டார். சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தலை மற்றும் கால்முறிவு ஏற்ப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இது சம்பந்தமாக மங்களூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

banner

Related Stories

Related Stories