இந்தியா

அரசு வேலையில் சேர விடாமல் தடுக்க மனைவி கையை துண்டாக வெட்டிய கணவன்.. மேற்குவங்கத்தில் அதிர்ச்சி!

மேற்குவங்கத்தில் அரசு வேலையில் மனைவி சேருவதைத் தடுப்பதற்காக அவரது கையை கணவனே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வேலையில் சேர விடாமல் தடுக்க மனைவி கையை துண்டாக வெட்டிய கணவன்.. மேற்குவங்கத்தில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் இவரது கணவர் அரசு வேலை வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் ரேணுகாதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று தம்பதிக்கு இடையே வேலையில் சேருவது தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கணவன் ஷேர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையை விட்டியுள்ளார். பிறகு அவரே மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின்முரணாக பேசியுள்ளார். மேலும் திடீரென அவர் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகியுள்ளார். பிறகு உடனே மருத்துவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸாரிடம் நடந்தவற்றை மனைவி ரேணுகாது தெரிவித்துள்ளார்.

மேலும், வேலையில்லாத ஷேர் முகமது, மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னைவிட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேருவரை தடுக்கவே அவரது கையை வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷேர் முகமதுவை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories