இந்தியா

பசியுடன் வயலில் இறங்கிய யானை.. உண்ணும் போது சுட்டுக்கொன்ற நபர்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!

கர்நாடகாவில் நிலத்தைச் சேதப்படுத்திய காட்டு யானை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசியுடன் வயலில் இறங்கிய யானை.. உண்ணும் போது சுட்டுக்கொன்ற நபர்: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட ஆலூர் கிராமத்தில் உள்ள வயலில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த யானையின் உடலை ஆய்வு செய்தனர்.

அப்போது யானையில் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்துள்ளது. இது குறித்து விசாரணை செய்தபோது, விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த விவசாயி சையத் சித்தார் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஒரு வருடத்தில் மட்டும் 5 யானைகள் மர்மாக உயிரிழந்துள்ளன. இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருப்பதாக அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் குறியும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

banner

Related Stories

Related Stories