இந்தியா

நரம்பில் செலுத்திக் கொண்ட போதை ஊசியால் நடந்த விபரீதம்.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

பஞ்சாபில் நரம்பில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரம்பில் செலுத்திக் கொண்ட போதை ஊசியால் நடந்த விபரீதம்.. துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பஞ்சாப் மாநிலம், லூதியான பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இளைஞரான இவர் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் நரம்பில் போதை ஊசி செலுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் ஃபரித்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ராஜ்குமாருக்குப் போதைப் பொருட்களைக் கொடுத்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் லூதியான பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான நரம்பில் போதை ஊசி செலுத்தியதால் ராஜ்குமார் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories