இந்தியா

“பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை.. கணவரிடம் போலிஸ் விசாரணை” : கேரளாவில் நடந்த சோகம்!

கேரளாவை சேர்ந்த பிரபல இளம் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை.. கணவரிடம் போலிஸ் விசாரணை” : கேரளாவில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா. பிரபல மாடல் அழகியான இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவருக்குக் கடந்த ஆண்டு ஷாஜத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இவர்கள் வீட்டில் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் சென்று பார்த்தபோது, ஷகானா தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். மேலும் அவரது கணவர் மனைவியின் உடலை பிடித்துக் கொண்டு அழுதுகொண்டிருந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் ஷகானா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நேற்று ஷகானாவின் பிறந்தநாள். இதை விமர்சையாக கொண்டாட அவர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் மகளின் கணவர் ஷாஜத், பணம் கேட்டு கொடுமை படித்து வந்துள்ளதாகவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஷாஜத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல இளம் நடிகை பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories