இந்தியா

குடிபோதை தலைக்கேறியதால் வந்த வினை.. ஏரியில் குதித்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் குடிபோதியில் ஏரியில் குதித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதை தலைக்கேறியதால் வந்த வினை.. ஏரியில் குதித்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம், போரிவாலி பகுதியில் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா உள்ளது. இங்கு இருக்கும் ஏரிpபகுதி அருகே உதய் பின்கர் என்பவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது போதை தலைக்கேறிய உதய் பின்கர் ஏரியில் குதித்துள்ளார்.

பின்னர் நீரில் மூழ்கிய அவர் தன்னைக் காப்பாற்றுப்படி கூச்சலிட்டுள்ளார். ஆனால் நண்பர்களும் போதையில் இருந்ததால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் அன்றை தினம் பூங்காவிற்கு விடுறை என்பதால் வேறு யாரும் அங்கு இல்லை.

இதனால், உதய் பின்கரை யாரும் காப்பாற்ற முடியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் போலிஸார் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு உதய் பின்கர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories