இந்தியா

கட்டிவைத்து கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்.. இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் கைது!

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் கணவன் கண்முன்னே மனைவியை 10 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிவைத்து கணவன் கண்முன்னே நடந்த கொடூரம்.. இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 10 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் திஷா சாலியன். இவர் கடந்த 23ஆம் தேதி தனது மனைவியுடன் மாமியார் வீட்டில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது, 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. அப்போது தம்பதியினரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கே கணவர் திஷா சாலியனை அருகில் இருந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அவர் கண்முன்னே மனைவியை பலவந்தமாக மிரட்டி 4 பேர் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் அந்தப்பெண் மயக்கமடைந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

பின்னர் அங்கிருந்து தப்பித்த சாலியன் தனது மனைவியை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனையடுத்து சாலியான் அளித்த புகாரின் பேரில், நியூ மண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரண்டு சிறார்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories