இந்தியா

தவறான நண்பர்களுடன் Instagram-ல் பழக்கம்.. பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு வாலிபர்களை போலிஸார் கைது செய்தனர்.

தவறான நண்பர்களுடன் Instagram-ல் பழக்கம்.. பள்ளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி மாநிலம், நெய்வாச்சேரி கிராமம் தோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளிச் சிறுமி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் இன்ஸ்டாகிராம் வழியாகப் பேசிப் பழகி வந்துள்ளளனர்.

இதையடுத்து கடந்த 18ஆம் தேதி சிறுமியை நந்தகுமார் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் சென்று வன்கொடுமை செய்துள்ளார். அப்போது உடனிருந்த அவரது நண்பரும் அச்சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் அச்சிறுமி நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரை அடுத்து வீட்டில் பதுங்கியிருந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகிய இரண்டு பேரையும் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories