இந்தியா

“தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு?” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தேசியக்கொடி கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு உள்ளது என கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு?” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் பா.ஜ.க ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் குறிப்பிட்ட சாதிய - இன மக்கள் மீது நடக்கும் தாக்குதலும் வன்முறைகளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மதமோதல்களை உண்டாக்க நினைக்கும் இந்துத்வா கும்பல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களை திட்டமிட்டே வளர்ப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில், சிறுபான்மையின பெண்களுக்கு எதிரான உடை விவகாரங்களை இந்துத்வா கும்பல் கையில் எடுத்து மோதல்களை உண்டாக்கும் வேலையைச் செய்து வருகிறது.

கடந்த மாதம் அங்குள்ள மசூதிகளில் ஏறி, காவிக் கொடி ஏற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளி - கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனத் தெரிவித்து இந்துத்வா கும்பல் எதிர்ப்பை பதிவு செய்தது.

“தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு?” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கர்நாடக மாநிலம் குண்டப்பூரில் அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. அதனை மீறி வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வாசலில் தடுத்து நிறுத்தியால், அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளையில், இந்துத்வா கும்பல்களின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஆடைகளை மாணவர்கள் அணிந்துவரக்கூடாது என்று அறிவித்தது.

இதுதொடர்பாக மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரலாம் ஆனால், அவர்கள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டுவார்கள் என்றும் கூறியது. இந்நிலையில் தொடர் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னதாக அம்மாநிலக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், “ராணுவத்தில் விதிகளைப் பின்பற்றுவது போல, கல்வி நிலையங்களிலும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். சீருடை விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், வேறு வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளுங்கள். கல்வி நிலையங்களுக்கு வெளியே என்ன உடையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கல்வி நிலைய வளாகத்தில் சீருடைக்கு மட்டுமே அனுமதி” எனத் தெரிவித்தார்.

“தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு?” : பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!

அம்மாநிலக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷின் இத்தகைய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு உள்ளது என மீண்டும் ஒரு அமைச்சர் கூறியிப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பள்ளியில் காவிக்கொடி ஏற்றிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, “அயோத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன்னதற்கு பலர் சிரித்தனர். ஆனால் இன்று அதை நாங்கள் செய்துள்ளோம்.

அதேபோல் இந்தியாவின் தேசியக்கொடி ஒருநாள் காவிக்கொடியாக மாற்றப்பட்டும். செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் வரும். தேசியக்கொடி ஏற்றும் கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றியதில் என்ன தவறு இருக்கிறது? மூவர்ணக் கொடி தற்போது தேசியக் கொடியாக இருப்பதால் அதனை மதிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பலரும் கண்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories