இந்தியா

கல்லூரி வளாகத்திலேயே மாணவியை பேப்பர் கட்டரால் குத்திக் கொன்ற சக மாணவன்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளாவில் கல்லூரி மாணவியை மாணவன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி வளாகத்திலேயே மாணவியை பேப்பர் கட்டரால் குத்திக் கொன்ற சக மாணவன்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் தலையோலப்பரம்பு என்ற பகுதியை சேர்ந்த 22 வயதான நித்தினா மோல் என்ற மாணவி மூன்றாமாண்டு சமையல்கலை படித்து வந்துள்ளார்.

அதே கல்லூரியில் கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அபிஷேக் பைஜு (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நிதினாவை பேப்பரை வெட்டப் பயன்படுத்தும் கட்டரை வைத்து அபிஷேக் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் போலிஸார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தொடர்பாக மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் கல்லூரி மாணவியை சக மாணவன் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories