இந்தியா

மது விலக்கு உள்ள மாநிலத்தில் கூட்டாளிகளுடன் மது அருந்திய பா.ஜ.க தலைவர்.. கைது செய்வாரா நிதிஷ்குமார்?!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் பா.ஜ.க தலைவர் மது அருந்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மது விலக்கு உள்ள மாநிலத்தில் கூட்டாளிகளுடன் மது அருந்திய பா.ஜ.க தலைவர்.. கைது செய்வாரா நிதிஷ்குமார்?!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் 2015ம் ஆண்டு பதவியேற்றபோது, பீகாரில் மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டுவந்தார்.

அப்போது, மதுவிலக்கு சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இந்தச் சட்டத்தை முதல்வர் நிதிஷ்குமார் அமல்படுத்தினார். மேலும் மதுவிலக்கை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனைகளை நிறைவேற்றினார்.

இந்நிலையில், நிதிஷ் குமாரின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் ஒருவரே, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.கவின் ஜஞ்சர்பூர் பிரிவின் மாவட்டத் தலைவராக இருக்கும் சியரம் ஷா, மதுபானி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, பாடல் கேட்டுக் கொண்டு மது அருந்தி ஆட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து சியரம் ஷா தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். இதனிடையே, மது விலக்கு அமலில் உள்ளதாகக் கூறப்படும் பீகாருக்குள் மது எப்படி வந்தது? பா.ஜ.க மாவட்டத் தலைவர் சியரம் ஷா மீது முதல்வர் நிதிஷ் குமார் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் எப்போது நடைபெற்றது என்பது குறித்தும், வீடியோ எப்போது வெளியானது என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories