இந்தியா

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் : பிப்.,18 ஆம் தேதி நாடு தழுவிய ரயில் மறியலில் ஈடுபட அழைப்பு!

வேளாண் சட்டத்தைக் கண்டித்து, வரும் 18ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் :
பிப்.,18 ஆம் தேதி நாடு தழுவிய ரயில் மறியலில் ஈடுபட அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தும், அதில் எந்தப் பலனும், முடிவும் கிடைக்கவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தங்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிரக்டர் பேரணி நடத்தினர். பின்னர் பிப்ரவரி 6 ஆம் தேதி சக்கா ஜாம் (நெடுஞ்சாலை மறியல்) போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்னும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில் அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்திருக்கிறது சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு.

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் :
பிப்.,18 ஆம் தேதி நாடு தழுவிய ரயில் மறியலில் ஈடுபட அழைப்பு!

இதுகுறித்து சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 12ம் தேதி முதல் ஒரு வாரம் ராஜஸ்தானில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மேலும் வரும் 18ம் தேதி நாடு முழுவதும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இதுதவிர கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 14ம் தேதி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் அளித்த பேட்டியில், “எங்கள் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்த்துவைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். மத்திய அரசு அதன் கடமையைச் செய்ய வேண்டும்.” எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories