இந்தியா

“திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவது ஆபத்தானது” - மீண்டும் எச்சரிக்கும் பிரதீப் கவுர்!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவது ஆபத்தானது என தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

“திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை நிரப்புவது ஆபத்தானது” - மீண்டும் எச்சரிக்கும் பிரதீப் கவுர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்தானது என தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது வரை நீடித்து வருகிறது.

பொது நிகழ்ச்சிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை பல்வேறு கட்டுப்பாடுகளுக்குட்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போதுதான் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஜனவரி 4-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு, மக்களின் பாதுகாப்பு பற்றிய யோசனையின்றி 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதியளித்து, மக்களை பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்தானது என தேசிய தொற்று நோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உள்ளரங்கு, காற்றோட்டமின்மை, அதிக நேரம் அங்கு இருப்பது, கூட்டமாக இருப்பது, கூச்சலிடுவது, முகக்கவசம் இல்லாமல் இருப்பது போன்றவை, கொரோனா தொற்றுப் பரவலை மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories