இந்தியா

வீராங்கனையிடம் லஞ்சம் கேட்டதாக ஸ்மிருதி இரானி மீது புகார்!

தன்னிடம் லஞ்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

வீராங்கனையிடம் லஞ்சம் கேட்டதாக ஸ்மிருதி இரானி மீது புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங்.

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் லட்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான வர்த்திகா சிங் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது லஞ்சம் கேட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வர்த்திகா சிங் அளித்துள்ள புகாரில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நெருங்கிய ஆதரவாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஞ்சித் சிங் ஆகியோர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் ஒரு கோடி லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் அந்த தொகையை குறைத்து 25 லட்சம் கேட்டதாவும் குற்றம்சாட்டினார்.

வீராங்கனையிடம் லஞ்சம் கேட்டதாக ஸ்மிருதி இரானி மீது புகார்!

அதுமட்டுமல்லாது, அமைச்சரின் ஆதரவாளராக இருக்கும் ஆண் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த நவம்பர் 23ம் தேதி அமேதி மாவட்டத்தில் உள்ள முசாபிர்கானா காவல்நிலையத்தில் வர்த்திகா சிங் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வரும் ஜனவரி 2ம் தேதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக வர்த்திகா சிங்கின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories