இந்தியா

‘கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று - பாரத் பயோடெக் சொல்வது என்ன?

கொரோனா தடுப்பூசி சோதனை முயற்சியில் பங்கேற்ற, ஹரியானா மாநில உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

‘கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று - பாரத் பயோடெக் சொல்வது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

'கோவாக்ஸின்' தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ஹரியானா மாநில பா.ஜ.க மூத்த தலைவராகவும், அம்மாநில உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராகவும் இருப்பவர் அனில் விஜ். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியை அனில் விஜ் கடந்த நவம்பர் 20ம் தேதி பரிசோதனைக்காக தனது உடலில் செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில், அனில் விஜ் தனது ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அமைச்சருக்கு தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்களும் கிளம்பியுள்ளன.

‘கோவாக்ஸின்' தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று - பாரத் பயோடெக் சொல்வது என்ன?

இதுகுறித்து விளக்கமளித்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 28 நாட்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பின்னர் தான் தடுப்பூசி கொரோனாவை கட்டுபடுத்துகிறதா என்பதும், அதன் செயல்திறனும் தீர்மானிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories