இந்தியா

மக்களே உஷார்... வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு : போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மோசடி அம்பலம்!

சென்னையில் போலி வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்சம் வரை மோசடி செய்த கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மக்களே உஷார்... வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு : போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மோசடி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஒரு நிறுவனம் தொடர்ந்து பலரை மோசடி செய்து வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வாட்ஸ்அப் மூலம் புகார்கள் வந்தது. அப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தனது மனைவி ராணி மற்றும் சிலருடன் சேர்ந்து ‘sailors maritime academy’ என்கின்ற பெயரில் போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.

மேலும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி போலி நிறுவனமான sailors maritime academy நிறுவனம் மூலம் 100க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது.

மக்களே உஷார்... வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு : போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மோசடி அம்பலம்!

அதனைத் தொடர்ந்து நிறுவனத்தை நடத்தி வந்த மோகன்தாஸ் அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது கூட்டாளிகளான கார்த்திக் மோகன், ராஜ், பார்த்திபன் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், மேலும் தொடர்புடைய பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முழுமையான விசாரனைக்கு இதற்கு முன்பு எவ்வளவு கொள்ளையடித்தார்கள் என்பது தெரியவரும் என போலிஸார் தரப்பில் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

banner

Related Stories

Related Stories