இந்தியா

மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடிபணிந்த மோடி - Hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி!

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடிபணிந்த மோடி - Hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் 367,385 -க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,129 ஆக உயிரிழந்துள்ளது. இந்த இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும் என அமெரிக்க அதிபரே கூறியிருந்தார்.

இந்த இக்கட்டான சூழலில் வல்லரசு அமெரிக்காவிடம் போதிய மருத்துவ உபகரணம் இல்லாமலும், மருந்துகள் இல்லாமலும் அந்நாட்டு மருத்துவத்துறை மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகிறது. அதனால் அதிபர் ட்ரம்ப் தங்களுக்கு எதிரிநாடு என கூறி வந்த சீனாவிடமே தற்போது உதவிக்கேட்டுள்ளார். அந்த உதவிகளை சீன அரசு உடனே வழங்கியுள்ளது. இன்னும் மருத்துவ உபகரணம் வழங்கும் பணியிலும் இறங்கியுள்ளது சீனா.

மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடிபணிந்த மோடி - Hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி!

இந்நிலையில், அமெரிக்காவிற்கு கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடும் வகையில் பேசியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ தாண்டிய நிலையில் முன்னதாகவே மத்திய அரசு இந்தியாவில் இருந்து மருத்துப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடைவித்தது. இதனிடையே கொரோனாவைக் கட்டுப்படுத்த மலேரியாவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது.

அது ஓரளவு பயன் தரும்வகையில் உள்ளதால் இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த மாத்திரைகளை ஏற்றுமதியை மத்தியஅரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.

மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடிபணிந்த மோடி - Hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி!

ஆனால், இந்திய மருந்து நிறுவனங்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பெறுவதற்கு அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தடையால், அந்த மாத்திரைகளை அமெரிக்காவிற்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இன்று காலை வரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடிபணிந்த மோடி - Hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி!

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அமெரிக்கா இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கிறது. அதற்குகாரணம் இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து பல பலன்களை அடைந்திருக்கிறது. வர்த்தகத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாத போது, நாங்கள் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தால் அது நிச்சயம் எனக்கு வியப்பாகத்தான் இருக்கும்.

நான் பிரதமர் மோடியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்குங்கள். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன். மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும். எதிர்காலத்தில் பதிலடி இருக்கும். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாது?” எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா அதிபரின் இந்த பேச்சுக்கு பிறகு மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் ஒரு சில மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக‌ தெரிவித்துள்ளது . இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்பை மனதில் கொண்டு நமது நாட்டின் திறன்களை சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு பாராசிட்டாமல் மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட மற்ற சில நாடுகளுக்கும் இந்த மருந்துகளை வழங்கவுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

மிரட்டல் விடுத்த ட்ரம்ப், அடிபணிந்த மோடி - Hydroxychloroquine மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா அனுமதி!

மேலும் இந்தியாவிற்கு தேவையான மருந்துகள் கையிருப்பு இருக்கிறதா? எவ்வளவு மருந்துகள் உள்ளது போன்ற எந்த தகவலையும் மத்திய அரசு அந்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அதுதொடர்பாக வெளிப்படையான அறிக்கையை மத்திய அரசு மக்களுக்கு அளிக்கவேண்டும் என எதிர்கட்சிக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இந்தியாவின் இந்த முடிவு மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கத்தக்கது. ஆனால் தான் இந்த உலக நாடுகளின் வல்லரசு என பேசித்திரியும் அமெரிக்கா இந்த விசத்யதை கையாண்டா விதம் எதேச்சிகரப் போக்காக உள்ளது. அமெரிக்கா நட்பு நாடு என்ற ரீதியில், இந்தியா காட்டிய மனிதாபிமானத்தை, அமெரிக்க ஈரான் மீது காட்டவில்லை..

கொரோனா பாதிப்பால் ஈரான் கடும் உயிரிழப்புகளை சந்திக்கிறது. அங்கு மருந்துக்கள் பெருமளவில் தட்டப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டுக்கு அமெரிக்காவின் பொருளாதார தடையேக் காரணம். ஆனால் பிரிட்டம், சீனா போன்ற நாடுகள் ஈரானுக்கு உதவி செய்து வருகின்றனர். ஈரானுக்கு அமெரிக்கா காட்டாத மனிதாபிமானத்தை இந்தியா அமெரிக்காவிற்கு காட்டியுள்ளது. இதனை அமெரிக்கா உணருமா என்பதே கேள்விக்குறிதான்.

banner

Related Stories

Related Stories