இந்தியா

நாட்டு மக்களுக்கு தலைநகர் அளித்திருக்கும் நம்பிக்கை.. 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

நாட்டு மக்களுக்கு தலைநகர் அளித்திருக்கும் நம்பிக்கை.. 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 511 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை என்பதுதான்.

நாட்டு மக்களுக்கு தலைநகர் அளித்திருக்கும் நம்பிக்கை.. 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமூக இடைவெளி மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். டெல்லியில் கரோனா வைரஸுக்கு 30 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், 5 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவி்ல்லை. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவி்ட்டுள்ளதாவது, “டெல்லி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படவி்ல்லை.

நாட்டு மக்களுக்கு தலைநகர் அளித்திருக்கும் நம்பிக்கை.. 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை!

இதற்காக நாம் இப்போது மகிழ்ச்சியடையக் கூடாது. இன்னும் மிகப்பெரிய சவால் இருக்கிறது.சூழல் இன்னும் நமது கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத செய்தி நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசுகள் தொடர் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories