இந்தியா

பெருமுதலாளிகளுக்கு அனுகூலம் அளிக்கும் மோடி அரசு: பட்ஜெட்டை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு!

சிறு-குறு தொழில்கள் மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதையும் கணக்கில் கொள்ளாமல், பெருமுதலாளிளுக்கு அனுகூலங்கள் அளிக்கும் வகையில் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சி.ஐ.டி.யு குற்றசாட்டியுள்ளது.

பெருமுதலாளிகளுக்கு அனுகூலம் அளிக்கும் மோடி அரசு: பட்ஜெட்டை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பிப்ரவரி 4 அன்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன். பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று சமர்ப்பித்த பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் தொடர்ச்சியான மந்தநிலை, வேலையின்மையின் அபாயகரமான உயர்வு, மக்களின் வறுமை பெருகுவது, விலைவாசி உயர்வு, மக்களின் துயரங்கள் அதிகரித்தல் போன்ற பிரச்னைகளில் எந்த தீர்வும் குறிப்பிடப்படவில்லை.

கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு, கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு என உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எந்தவித அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பெருமுதலாளிகளுக்கு அனுகூலம் அளிக்கும் மோடி அரசு: பட்ஜெட்டை எதிர்த்து தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு!

பட்ஜெட்டில் அரசின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் தாரைவார்க்க அரசு முடிவு செய்துள்ளது பெரும் ஆபத்தை உருவாக்கும். இந்திய கட்டமைப்பிற்கு பெரும் பங்காற்றி வரும் எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பது, ரயில்வே துறையில் தனியார் பங்களிப்புடன் 150 வழித்தடங்களை ஒப்படைப்பது, மேலும் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நடுத்தர, சிறு-குறு தொழில்கள் பொருளாதார மந்தநிலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதையும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி ஆகியவற்றால் நசுக்கப்பட்டுள்ளதையும் கணக்கில் கொள்ளாமல், பட்ஜெட் மூலம் இத்தொழில்கள் பயனடைவதில் சிறப்பு அக்கறை இருப்பதாக மோடி அரசு கூறுகிறது.

அதே நேரத்தில், பெருவணிக/ கார்ப்பரேட்/ பெருமுதலாளிகளுக்கு அனுகூலங்கள் அளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளதை கண்டித்தும், எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிராக போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாகவும், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வலியுறுத்தி பிப்ரவரி 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் சி.ஐ.டி.யு.வுடன் இணைக்கப்பட்ட சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories