இந்தியா

“ஐ.சி.யூவில் உள்ளது நாட்டின் பொருளாதாரம்” - முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை!

பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால் 1991ம் ஆண்டு நெருக்கடி தள்ளப்படுவோம் என பிரதமரின் முன்னாள் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

“ஐ.சி.யூவில் உள்ளது நாட்டின் பொருளாதாரம்” - முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச வளர்ச்சிக்காக அரவிந்த் சுப்பிரமணியன் உருவாக்கியுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

”பணமதிப்பிழப்பு, வாராக்கடன் போன்றவற்றால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு வழக்கமானது அல்ல. பணமதிப்பிழப்புக்கு பின் பெரிதும் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறையால் 5 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை வங்கிகளும் முற்றிலும் நிறுத்தியுள்ளன.” என அரவிந்த் குறிப்பிட்டுள்ளார்

மேலும், ”நாட்டின் வளர்ச்சி 4.5% ஆனதால் மட்டும் இந்த மந்த நிலை ஏற்பட்டுவிடவில்லை. இதற்கு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி குறைந்ததும் ஒரு காரணமாக உள்ளது. அதுபோல, ஏற்றுமதி இறக்குமதியிலும் வருமானம் குறைந்ததும் அடங்கியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் 1991ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுவிடுவோம் என அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories