இந்தியா

அசோக் லேலாண்ட், மாருதி வரிசையில் உற்பத்தி நிறுத்ததை அறிவித்தது போஷ் இந்தியா!

அசோக் லேலாண்டை தொடர்ந்து, பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போஷ் இந்தியாவும் தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது.

அசோக் லேலாண்ட், மாருதி வரிசையில் உற்பத்தி நிறுத்ததை அறிவித்தது போஷ் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பல்வேறு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.

விற்பனை சரிவு, உற்பத்தி தேக்கத்தால் அசோக் லேலாண்ட், மஹிந்திரா, மாருதி போன்ற பல ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலையாட்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றன.

இது போன்ற உற்பத்தி நிறுத்த அறிவிப்புகள் வாகனங்களுக்கு உதிரி பாகத்தை தயாரிக்கும் நிறுவனங்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

அசோக் லேலாண்ட், மாருதி வரிசையில் உற்பத்தி நிறுத்ததை அறிவித்தது போஷ் இந்தியா!

அந்த வரிசையில், பிரபல வாகன உதிரி பாகம் தயாரிப்பு நிறுவனமான போஷ் இந்தியா அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 10 நாட்கள் வீதம் உற்பத்தியை நிறுத்த முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள போஷ் இந்தியா ஆலைகள் 30 நாட்களுக்கு மூடப்பட இருக்கின்றன. இந்த உற்பத்தி நிறுத்த அறிவிப்பு போஷ் இந்தியா நிறுவனத்தைச் சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories