இந்தியா

ரூ.1 லட்சம் கோடி கடனில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை துறை- இதில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?

ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிக்கித்தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.1 லட்சம் கோடி கடனில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை துறை- இதில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக உலக வங்கியில் ஒரு லட்சம் கோடிக்கு கடன் வாங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

ஆனால் இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் ஆண்டுதோறும் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வட்டி மட்டும் செலுத்துப்பட்டு வருகிறது.

சுங்கச்சாவடி கட்டணங்களாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இந்த வருவாயை விட கூடுதலாக 4 ஆயிரம் கோடி வட்டி செலுத்தவுள்ளதால் நெடுஞ்சாலைத் துறை கடனில் மூழ்கியுள்ளது.

ரூ.1 லட்சம் கோடி கடனில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை துறை- இதில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?

இதனால் புதிய திட்டங்களுக்கான வகுக்க முடியாமலும், நாடு முழுவதும் புதிய சாலைகளுக்கான பணிகளை செயல்படுத்த முடியாமலும் தேசிய நெஞ்சாலை ஆணையத்துறை திணறி வருகிறது.

மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்கி கடனை அடைக்க வேண்டும் என்றும், மோசமான நிலையில் உள்ள பல தேசிய நெடுஞ்சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள கடனால் இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு என்பது காணல் நீராக உள்ளது.

banner

Related Stories

Related Stories