இந்தியா

மக்களவை தேர்தல் : தொடங்கியது 6-வது கட்ட வாக்குப்பதிவு ! 

7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  

மக்களவை தேர்தல் : தொடங்கியது 6-வது கட்ட வாக்குப்பதிவு ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 425 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மீதுள்ள 118 தொகுதிகளுக்கு மேலும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி, இன்று பீகாரில் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மத்திய பிரேதசம் 8, உத்திரபிரதேசம் 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும், மத்தியப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவின்போது, திரிபுராவில் ஒரு தொகுதியில் முறைகேடு நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், அங்குள்ள 168 வாக்குச் சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories