தி.மு.க

மின்வாரிய தொ.மு.ச பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி காலமானார் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மின்வாரியத் தொ.மு.சங்கத்தின் தலைவராக, பொதுச்செயலாளராகப் பணியாற்றிய சிங்கார ரத்தினசபாபதி அவர்களின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மின்வாரிய தொ.மு.ச பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி காலமானார் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மின்வாரியத் தொ.மு.சங்கத்தின் தலைவராக, பொதுச்செயலாளராகப் பணியாற்றிய சிங்கார ரத்தினசபாபதி அவர்களின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு :

“முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் பேராசிரியர் பெருந்தகையின் பேரன்பைப் பெற்றவரும், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளருமான சிங்கார ரத்தினசபாபதி அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு கழகத்தின் தலைவராய் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞரின் பிறந்தநாளில் துவங்கப்பட்ட மின்வாரியத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக, பொதுச்செயலாளராகப் பணியாற்றிய சிங்கார ரத்தினசபாபதி அவர்கள், மின்வாரிய ஊழியர்களின் நலன்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். கழக ஆட்சியில் மின் ஊழியர்களுக்கு முதல் முறையாக ஊதிய உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு, மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு இணையான 40 சதவீத ஊதிய உயர்வு, மீண்டும் ஒரு முறை 40 சதவீத ஊதிய உயர்வு மற்றும் மின் வாரியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்களுக்கு மின் கழக ஊழியர்களாக பணி நிரந்தரம் பெற்றுக் கொடுத்தது என, மின்வாரிய ஊழியர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காவும் தனது பொதுப்பணியை செவ்வனே தொடர்ந்து வந்தவர்.

மின்வாரிய தொ.மு.ச பொதுச் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி காலமானார் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அ.தி.மு.க ஆட்சியில் மின் ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்துப் போராட்டங்கள் நடத்தியவர் மட்டுமின்றி, 2.57 சதவீத ஊதிய உயர்வை போராடிப் பெற்றுக் கொடுத்தவர். மின்வாரிய ஊழியர்களுக்கான நலனில் காட்டிய அதே ஆர்வத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிப் பணிகளிலும் காட்டி, முத்தமிழறிஞர் கலைஞரின் பாசத்திற்குரியவராகத் திகழ்ந்தார். என் மீது தனி அன்பு செலுத்தி வந்த அவரை நானும் இழந்து நிற்கிறேன். மின்வாரிய ஊழியர்களும் இழந்து தவிக்கிறார்கள்.

மின்வாரிய ஊழியர்களுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவும் பாடுபட்ட அவரை இழந்து தவிக்கும் இந்த நேரத்தில் - அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், மின் வாரிய தொ.மு.ச. ஊழியர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories