தி.மு.க

“தமிழகம் முழுவதும் நவ.,16ல் தி.மு.க பொதுக்கூட்டம்” - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் விளக்கும் வகையில் தமிழகமெங்கும் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

“தமிழகம் முழுவதும் நவ.,16ல் தி.மு.க பொதுக்கூட்டம்” - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. இதில், தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லுமளவுக்கு, பகல் கொள்ளை - உளுத்துப் போன ஊழல் - எதற்கும் லஞ்சம் - எங்கும் கமிஷன் என்று, அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அ.தி.மு.க அரசையும் மற்றும் அது தனது அடிவருடும் ஆட்சி என்பதால், அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

“தமிழகம் முழுவதும் நவ.,16ல் தி.மு.க பொதுக்கூட்டம்” - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

இந்த கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும், மிகச் சிறப்பான பயனளித்திடும் வகையில், நவம்பர் 16ம் தேதி (சனிக்கிழமை) “தி.மு.கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை” நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மேற்கண்ட 20 தீர்மானங்களில் குறிப்பாக, “பொய்களைச் சொல்லியே பொழுது போக்கி, இரட்டை வேடம் போடும் அதிமுக”, “ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி”, “ ஊழலில் திளைக்கும் அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு - உரிய விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பாஜக அரசு”, “மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அ.தி.மு.க அரசு” ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப்பதிந்திடும் வண்ணம், துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள்தோறும் விநியோகித்திட ஆவன செய்வதென்றும்; தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென்றும்; மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

banner

Related Stories

Related Stories