தி.மு.க

செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்- சாதுர்யமாக காப்பற்றிய எம்.எல்.ஏ சேகர்பாபு!

சென்னையில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை துறைமுகம் பகுதி தி.மு.க எம்.எல்.ஏ சேகர்பாபு காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்-  சாதுர்யமாக காப்பற்றிய எம்.எல்.ஏ சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் துறைமுகம் பகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளவர் சேகர்பாபு. நேற்று முன்தினம் இரவு தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சேகர் பாபு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சத்யா நகர் போர்நினைவு சின்னம் அருகே நிறைய கூட்டம் சேர்ந்திருந்தது. போலீசாரும், தீயணைப்பு துறையினரும் நின்றிருந்தனர். இதை பார்த்ததும், சேகர்பாபு வண்டியை நிறுத்த சொல்லி கீழிறங்கினார். சேகர் பாபுவை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் ஓடிவந்து விஷயத்தை சொன்னார்கள்.

சத்யா நகரை சேர்ந்த மாறன் என்பவருக்கு குடும்பபிரச்சனை காரணமாக தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுப்பதாக சொன்னார்கள். அவரது குடும்பத்தினரும், போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கீழே இறங்கி வந்துவிடுமாறு மாறனிடம் மன்றாடி கொண்டிருந்தனர்.

இதையெல்லாம் கேட்ட சேகர்பாபு, " எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசிக்கலாம்" என்றார். சேகர்பாபுவின் பேச்சுக்கினங்க மாறன் கீழிறங்கி வந்தார். இறங்கி வந்த அவரிடம் காரில் வைத்திருந்த தன்னுடைய சட்டையை எடுத்து கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார். பின்னர், அவருடைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு பின்னர்தான் அங்கிருந்த மொத்த கூட்டமும் நிம்மதி ஆடைந்து.

banner

Related Stories

Related Stories