சினிமா

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

நயன்தாரா ரொம்ப டெரராக இருப்பதாக சுஹாசினி விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் இன்றளவும் நின்று பேசுகிறது. இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் கொடுத்தது.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

இவரது மனைவி நடிகை சுஹாசினி. இவர் தமிழில் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தார். 1979- உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ரஜினி, பிரபு, சத்யராஜ், மோகன் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பலருக்கும் கனவு கன்னியாகவே இருந்தார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

கமல்ஹாசனின் உறவினரான இவர், மணிரத்னத்தை 1988-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து அம்மாவாக, குணசித்திர கதாபத்திரமாக இவர் நடித்து வந்தார். தற்போதும் கூட தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதோடு முக்கிய பிரபலங்களையும் அவ்வப்போது பேட்டி எடுத்து வருகிறார்.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

அந்த வகையில் அண்மையில் பிரபல இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனை வைத்து பேட்டி எடுத்தார். அப்போது விக்னேஷ் சிவனிடம் வேலை, குடும்பம், தொழில் உள்ளிட்ட விஷயங்களை பற்றி கேள்வி கேட்க, அவரும் கலகலப்பாக பதில் அளித்தார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கூட்டணியில் உருவான முதல் படமான 'நானும் ரெளடி தான்' படத்தை பற்றி இருவரும் கலந்துரையாடினர்.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ராதிகா நடித்திருப்பார். அந்த படத்தில் ராதிகாவுக்கு, விக்னேஷ் சிவனின் அம்மா பெயரான மீனா குமாரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும். எனவே இந்த படம் குறித்து அவரது தாய் எதுவும் கூறவில்லையா என்றும், போலீசை விட ரௌடிகளுடன் சகவாசம் எப்படி வந்தது என தாய் கேட்கவில்லையா என்றும் சுஹாசினி கேள்வி எழுப்பினார்.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

அதற்கு விக்னேஷ் சிவன், அப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு சுஹாசினி அந்த படத்தில் நடித்த ராதிகா சொன்ன ஒரு விஷயத்தை பகிர்ந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தமாக இருந்தபோது, நயன்தாரா 'சைலென்ஸ்' என்று ரொம்பவே சத்தமாக கத்திவிட்டாராம். இதனை கேட்டு ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் அமைதியாக இருந்ததாம்.

“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !

அதான் ராதிகா என்னிடம் கூறும்போது, 'நானே ஷூட்டிங் ஸ்பாட்டில் டெரராகத்தான் இருப்பேன். ஆனால் இந்தப் பொண்ணு நயன்தாரா என்னைவிட ரொம்ப டெரரா இருப்பா போல. சைலென்ஸ்ங்றதையே அவ்ளோ சத்தமா சொல்றா' என்று கூறியதாக சுஹாசினி கூறினார். அதனையடுத்து நயன்தாரா கொஞ்சம் டெரர்தான் என விக்னேஷ் சிவனும் கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories