சினிமா

தமிழ்நாடு அரசின் விருது பெற்ற அக்கா.. ட்வீட் போட்டு வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் !

குடியரசு தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அக்காக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் விருது பெற்ற அக்கா.. ட்வீட் போட்டு வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய தனது திரை பயணத்தை காமெடி, காமெடி கலந்த ஹீரோ என்ற லெவெலுக்கு தன்னை கொண்டு சென்றுள்ளார்.

இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், படலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் தற்போது திரையுலகில் வலம் வருகிறார். குறுகிய காலத்தில் இவரது இந்த மிகப்பெரிய வெற்றிக்கு இவரது ரசிகர்கள் தான் காரணம். இவரது நடிப்பால் 2கே கிட்ஸை வெகுவாக கவர்ந்தார். அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான நாயகனாக இவர் விளங்குகிறார்.

தமிழ்நாடு அரசின் விருது பெற்ற அக்கா.. ட்வீட் போட்டு வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன் !

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'டான்' படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. ஆனால் அதன்பிறகு வெளியான 'பிரின்ஸ்' படம் எதிர்பார்த்த அளவு வசூல் கூட சாதனை படைக்காமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தற்போது இவர் 'அயலான்', 'மாவீரன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் வெளியீட்டுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இவரின் அக்கா கௌரி மனோகரி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் "எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். எங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறந்த மருத்துவர் விருதுக்காக வாழ்த்துகள் அக்கா. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அப்பா நிச்சயம் பெருமைகொள்வார். உனது நேர்மையும், உழைப்பும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories