சினிமா

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த சிம்பு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

விஜய் சேதுபதி நடித்துள்ள `யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் ஒரு பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த சிம்பு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் விஜய் சேதுபதி. தற்போது கோலிவுட்டில் அதிக படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகரும் இவரே. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம், கெஸ்ட் ரோல் என எதுவானாலும் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் பல படங்களில் ஒன்று `யாதும் ஊரே யாவரும் கேளீர்'.

சமீபத்தில் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தற்போது இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.`முருகா' என்ற இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். மோகன் ராஜன் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்த சிம்பு... ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதுதவிர விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், முகிழ், மணிரத்னத்தின் ஆந்தாலஜி `நவரசா'வில் பிஜோஜ் நம்பியார் இயக்கத்தில் ஒரு படம் என படங்கள் தயாராக இருக்கிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடம், தீபக் சுந்தர்ராஜன் இயக்கதில் ஒரு படம், மாநகரம் இந்தி ரீமேக் எனப் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

banner

Related Stories

Related Stories