சினிமா

“இனி கவனத்துடன் இருக்கிறேன்” - பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தொடர்பாக வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.

“இனி கவனத்துடன் இருக்கிறேன்” - பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தொடர்பாக வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், சிறப்பு கதாப்பாத்திரம் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று திறம்பட நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு ரசிகர்களால் மக்கள் செல்வன் என்றும் அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் விஜய்சேதுபதி.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படத்திலும் நடிகர் விஜய்க்கு நிகராக தன்னுடைய வில்லன் கதாப்பாத்திரத்தை நிலை நிறுத்தியிருப்பார் நடிகர் விஜய் சேதுபதி. அதற்கு விஜய், விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

“இனி கவனத்துடன் இருக்கிறேன்” - பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது தொடர்பாக வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி!

இப்படி இருக்கையில், இன்று தனது 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் நடிகர் விஜய் சேதுபதி. அதற்காக பட்டாக்கத்தியைக் கொண்டு கேக் வெட்டுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வட்டமடித்து பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறது. இந்நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

அதில், “எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்.

அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories