உலகம்
தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - காரணம் என்ன ?
பாகிஸ்தானின் பலுசிஸ்தானை மையமாக கொண்டு ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் பாகிஸ்தானின் அருகாமை நாடான ஈரானில் பல தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஈரானில் கடுமையான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டிய ஈரான் பாகிஸ்தானில் அந்த அமைப்பின் தளங்கள் இருக்கும் இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அனுமதி இல்லாமல் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தத் தாக்குதல்கள் தன் இறையாண்மையை மீறுவதாகவும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியிருந்தது. மேலும், தனது ஈரான் தூதரையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.
இதனால் அந்த பிராந்தியத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே ஈரானின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஈரானிய வெளியுறவு அமைச்சகம் "பாகிஸ்தானின் இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. நல்ல அண்டை நாடு மற்றும் சகோதரத்துவம்" என்ற கொள்கையை கடைபிடிப்பதாகவும், தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான உறவுகளை எதிரிகள் சிதைக்க அனுமதிக்காது"என்று கூறியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!