உலகம்
தேள் கொட்டியதால் 7 முறை மாரடைப்பு.. ஷூ போடும் போது 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!
நாம் உடை மாற்றும் போது அலட்சியமாக இருக்கக் கூடாது. அதேபோல் ஷூ போன்ற காலணிகளை அணியும் போதும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும். நம் வீடுதானே என்று இருந்துவிட்டால் அது நமக்கு சில நேரத்தில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதற்குக் காரணம், நமக்கே தெரியாமல் நமது உடை, காலணிகளில் தேள், பாம்பு போன்றவை அதனுள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மழைக் காலத்தில் நாம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்நிலையில் பிரேசில் நாட்டில் ஷூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட மஞ்சள் நிற தேள் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த சிறுவன் லூயிஸ்.
இவர், கடந்த வாரம் இறுதியில் வெளியே செல்வதற்காகத் தனது காலணிகளை அணிந்துள்ளார். அப்போது காலில் ஏதோ கடித்துள்ளது. உடனே சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவன் அணிந்திருந்த ஷூவை கழட்டியபோது அதற்குள் இருந்து கொடிய விஷம் கொண்ட மஞ்சள் நிற தேள் வெளியே வந்து ஓடியுள்ளது.
பிறகு சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு இரண்டு நாட்களுக்குச் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு 7 முறை மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரேசில் மற்றும் தென் அமெரிக்காவின் பிற பகுதிகளில் தேள் கடியால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 2000ம் ஆண்டு தேள் கடியால் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2018ம் ஆண்டில் 15,600 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!